Close
செப்டம்பர் 20, 2024 7:39 காலை

பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா

ஈரோடு

பெருந்துறை அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசின் இலவச சைக்கிள் வழங்கிய எம்எல்ஏ ஜெயக்குமார்

பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவில்  பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பிளஸ்-2 வகுப்பு படிக்கும் மாணவர்கள் 169 பேருக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.

பள்ளி தலைமை ஆசிரியர் ரவி வரவேற்புரையாற்றினார். பள்ளிக்குழு நிர்வாகிகள் கல்யாணசுந்தரம், பல்லவி பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக என்சிசி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை யை ஏற்ற சட்டமன்ற உறுப்பினர் .ஜெயக்குமார் தேசிய கொடியை ஏற்றினார். பின்னர் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர் கள் 169 பேருக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டது.

பெருந்துறை யூனியன் சேர்மன் சாந்தி ஜெயராஜ், பெருந்து றை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் அருள்ஜோதி செல்வராஜ், துணை சேர்மன் உமா மகேஸ்வரன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வேட்டுவபாளையம் அருணாச்சலம்,

கருமாண்டிசெல்லிபாளையம் பேரூர் கழக செயலாளர் கே எம் பழனிசாமி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் உமா நல்ல சிவம், மாவட்ட மாணவர் அணி செயலாளர் மணிகண் டன், ஒன்றிய மகளிர் அணி நிர்வாகிகள் மோகனாம் பாள், மோகன செல்வி, கார் மணி, குமாரசாமி, ஜே பி, ரவிக்குமார் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top