Close
அக்டோபர் 5, 2024 7:13 மணி

புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா மெட்ரிக். பள்ளிக்கு சண்டிகர் பல்கலைக்கழக விருது

தமிழ்நாடு

சண்டிகர் பல்கலைக்கழக விருது பெறுகிறார், கவிஞர் தங்கம்மூர்த்தி

புதுக்கோட்டை திருக்கோகர்ணம்  ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளிக்கு, இணைப் பாடத்திட்டத்தில் சிறந்து விளங்கும் பள்ளி என்ற விருதை பஞ்சாப் மாநிலத் தைச் சேர்ந்த சண்டிகர் பல்கலைக் கழகம் வழங்கி பெருமைப் படுத்தியுள்ளது.

வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் புத்தக மில்லா தினம்,யோகா, கராத்தே, சிலம்பம், அபாகஸ், வாய்ப்பாட்டு, பரதம், இசை, ஜூம்பா நடனம் உள்ளிட்ட இணைப் பாடத் திட்டங்களை   சிறப்பாகச் செயல்படுத்தி யதற்காக சண்டிகர் பல்கலைக்கழகம் சார்பில் இப்பள்ளிக்கு  விருது வழங்கப்பட் டது.

பல்கலைக் கழகத்தின் இணைவேந்தர் ஆர்.எஸ், பாவா, ராணுவ அதிகாரி கன்வால் ஜீத்சிங் திலியான் ஆகியோர் இந்த விருதை பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்திக்கு வழங்கி வாழ்த்தினார்.

முன்னதாக, சண்டிகர் பல்கலைக்கழக வளாகத்தில் வெள்ளிக் கிழமை நடை பெற்ற தேசியக் கல்விக் கொள்கை தொடர்பான கருத்தரங்கில் இப்பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி கலந்து கொண்டு ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்து உரையாற்றினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top