Close
ஜூலை 7, 2024 10:54 காலை

கந்தர்வகோட்டை அருகே கொல்லம்பட்டி தொடக்கப்பள்ளியில் பூமி சுழற்சி தினம்

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை அருகே கொல்லம்பட்டி தொடக்கப்பள்ளி யில் பூமி சுழற்சி நாள்  கடைப்பிடிக்கப்பட்டது.

கந்தர்வகோட்டை அருகே கொல்லம்பட்டி தொடக்கப்பள்ளி யில் பூமி சுழற்சி நாள்  கடைப்பிடிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் கொல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பூமி சுழற்சி நாள்  கடைபிடிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் வெங்கடசாமி தலைமை வகித்து அனைவரையும் வரவேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் சிற்பபு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை வட்டாரச் செயலாளர் ரகமதுல்லா பேசியதாவது:

பூமியின் அச்சில் சுழற்சியின் முக்கிய கண்டுபிடிப்பை அங்கீகரிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நாள்தான் பூமியின் சுழற்சி நாளாகும்.
2024 ஆம் ஆண்டு புவி சுழற்சி தினத்தை அனுசரிப்பதற்கான கருப்பொருள் நமது கிரகத்தின் இயக்கத்தின் கண்டுபிடிப்பை கௌரவித்தல்  என்பதாகும்.

பூமியின் சுழற்சியின் கருத்து பண்டைய கிரேக்கத்தில் கிமு 470 இல் இருந்து வந்தது. இருப்பினும், 1851 ஆம் ஆண்டு வரை பிரெஞ்சு இயற்பியலாளர் லியோன் ஃபூக்கோ தனது புகழ்பெற்ற ஊசல் பரிசோதனையுடன் உறுதியான ஆதாரத்தை வழங்கினார்.

இந்தச் சோதனையானது கிரீஸில் உள்ள பாந்தியன் மற்றும் பாரிஸ் வான்காணகத்தில் காட்சிப்படுத்தப்பட்டது, இது பூமியின் சுழற்சியை நிரூபிப்பதில் ஒரு மூலக்கல்லாக மாறியது, இது நீண்ட காலமாகக் கோட்பாட்டளவில் இருந்து வந்தாலும் உறுதியாக நிரூபிக்கப்படவில்லை.

புவி சுழற்சி நாள் கல்வி வாய்ப்பாக செயல்படுகிறது, குறிப்பாக குழந்தைகள், நமது கிரகத்தின் இயக்கவியலைப் பற்றி அறிந்து கொள்ளவும், ஈர்க்கப்படவும். இது ஆர்வத்தை ஊக்குவிக்கிறது மற்றும் பூமியின் சுழற்சியின் நிகழ்வு பற்றிய ஆழமான புரிதலை ஊக்குவிக்கிறது என்று பேசினார்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற துளிர் திறனறிவுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இல்லம் தேடிக் கல்வி மைய தன்னார்வலர்கள் பானுமதி, முருகேஸ்வரி, சங்கீதா உள்ளிட்டோர் கொண்டனர். நிறைவாக ஆசிரியர் செந்தில் குமார் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top