Close
ஜூலை 4, 2024 4:25 மணி

மாலை நேரக்கல்லுாரி உருவானது எப்படி?

தேனி

பெருந்தலைவர் காமராஜர்

முதல்வர் காமராஜரின் அறிவுரையின் கீழ் தான் மாலை நேர கல்லுாரி திட்டம் உருவானது.

ஒரு முறை ஒரு பெண் காமராஜரிடம் வந்து தான் நல்ல மார்க் வாங்கி இருப்பதாகவும், எனக்கு கல்லூரியில் சீட் கிடைக்க வில்லை என்றும் சொல்லி வருத்தப்பட்டராம்.

காமராஜர் சம்பந்தப்பட்டவர்களை கூப்பிட்டு கேட்க கல்லூரி முதல்வர் 12 மாணவிகளுக்கு தான் லேப் வசதி இருப்பதால், 13 வதாக இன்னொரு பெண்ணை சேர்க்க இயலாது என்று சொல்லியிருக்கிறார். அதற்கு பதிலளித்த முதல்வர் காமராஜர் உங்கள் வீட்டில் எத்தனை பேருக்கு சமைக்கிறீர்கள்? என்று கேட்டாராம்.

அந்த முதல்வர் 4 பேருக்கு என்று சொல்லியிருக்கிறார். நான்கு பேருக்கு சமைத்து முடித்த பின்னர் இன்னும் 4 பேர் வந்தால் என்ன செய்வீர்கள் என முதல்வர் காமராஜர் மீண்டும் கேட்டுள்ளார்.

அதற்கு அந்த முதல்வர் ஒரு முறை சாதம் செய்து விட்டு இரண்டாம் முறையும் செய்வேன் என்று சொன்னாராம். உடனே முதல்வர் காமராஜர், அதையே ஏன் கல்லூரியிலும் செய்யக்கூடாது. 3.30 -க்கு கல்லூரி முடிந்ததும், இன்னும் 12 பேருக்கு கல்லூரி வைத்து, அதே லேப் -ஐ பயன்படுத்தலாமே என்று சொல்ல, அப்படி பிறந்தது தான் மாலை கல்லூரி (Evening College). முடியாது என்று சொல்வதை விட தீர்வை நோக்கி பயணிப்பதே மக்கள் பணி என்பதற்கான எடுத்துக்காட்டு தான்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top