Close
ஜூலை 7, 2024 11:04 காலை

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர் உறுப்பினர் சேர்க்கை முகாம்

புதுக்கோட்டை

ஆசிரியர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் சந்திப்பு முகாம்

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர் உறுப்பினர் சேர்க்கை மற்றும் ஆசிரியர்கள் சந்திப்பு முகாம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் உறுப்பினர் சேர்க்கை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிபட்டியில் தொடங்கி வட்டார வள மையம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பழைய கந்தர்வகோட்டை, மெய்குடி ப்பட்டி, விராலிப்பட்டி, முதுகுளம்,அரசு உயர்நிலைப் பள்ளிகள் குளத்தூர் நாயக்கர் பட்டி, புதுநகர், கோமபுரத்தில் முதற்கட்ட உறுப்பினர் சேர்க்கை மற்றும் ஆசிரியர் சந்திப்பு முகாம் நிறைவடைந்தது.

இரண்டாம் கட்டமாக கந்தர்வகோட்டை ஒன்றிய ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளில்
நடைபெற்றது.

இந்நிகழ்வில் கந்தர்வகோட்டை ஒன்றிய தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் வட்டாரச் செயலாளர் ரவி,மாவட்ட செய்தித் தொடர்பாளர் ரகமத்துல்லா, மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் கலை மணி, வட்டாரத் துணைத் தலைவர் முருகன் செயற்குழு உறுப்பினர்கள் விமல் விஸ்வநாத் உள்ளிட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் ஆசிரியர்கள் சந்திப்பு முகாம் நடைபெற்றது.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் என பெயர் சூட்டப்பட்டு 19 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாக ஆசிரியர் நலன்,மாணவர் நலன், பொது மக்கள் நலன் என சிறப்பாக செயல்பட்டு வருகிறது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top