Close
ஜூலை 5, 2024 1:28 மணி

தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் புதுக்கோட்டை மச்சு வாடி அரசு முன்மாதிரி மேல் நிலைப் பள்ளி மாணவி முதலிடம்

புதுக்கோட்டை

கட்டுரைப் போட்டியில் முதல்பரிசு வென்ற புதுக்கோட்டை மச்சு வாடி அரசு முன்மாதிரி மேல் நிலைப் பள்ளி மாணவிக்கு பரிசளிக்கிறார், முதன்மைகல்வி அலுவலர் மஞ்சுளா

தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் புதுக்கோட்டை மச்சு வாடி அரசு முன்மாதிரி மேல் நிலைப் பள்ளி மாணவி முதலிடம் வென்றுள்ளார்.

புதுக்கோட்டை வருவாய் மாவட்ட அளவில் 11 மற்றும் 12 -ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை யின் சார்பில் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்தப் பட்டன.

இதில் கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டுபுதுக்கோட்டை அரசு முன் மாதிரி மேல்நிலைப் பள்ளியின் 12 -ஆம் வகுப்பு மாணவி சா.சபீனா பேகம் முதலிடம் வென்றார்.

பள்ளி மாணவியைப் பாராட்டி ரூபாய் 10,000 ரொக்கப் பரிசும் பாராட்டுச் சான்றையும் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மஞ்சுளா வழங்கி வாழ்த்தினார். நிகழ்வில். பள்ளி முதல்வர் பெ.சிவப்பிரகாசம், மாவட்ட சுற்றுச் சூழல் அலுவலர் சாலை செந்தில் குமார் மற்றும் தமிழாசிரியை இளவரசி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top