Close
ஜூலை 8, 2024 9:31 காலை

மாவட்ட அளவிலான மன்றப் போட்டிகளில் வென்ற மாணவர் களுக்கு பாராட்டுச்சான்று வழங்கி முதன்மை கல்வி அலுவலர் வாழ்த்து

புதுக்கோட்டை

மாவட்ட அளவிலான மன்றப்போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச்சான்றிதழை வழங்கிய மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மா.மஞ்சுளா 

புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலக தேர்வுக்கூட அரங்கில் மாவட்ட அளவிலான மன்றப்போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் தேர்வு செய்யப்பட்ட அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மா.மஞ்சுளா  தலைமை வகித்தார்.

இதில், அரசுப் பள்ளிகளில் 6 -ஆம் வகுப்பு முதல் 9 -ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களில் மாவட்ட அளவில் இலக்கிய மன்றப்போட்டியில் பேச்சு, கட்டுரை, கவிதை ஆகிய தலைப்பிலும், வினாடி, வினாப்போட்டி தலைப்பிலும்,

சிறார் திரைப்படத்தில் திரை விமர்சனம், தனிநபர் நடிப்பு, குறும்படம் தயாரித்தல் ஆகிய தலைப்புகளிலும், வானவில் மன்றப்போட்டியில் அறிவியல் கண்காட்சி, அறிவியல் செயல் திட்டம், அறிவியல் நாடகம் ஆகிய தலைப்பிலும் ஒவ்வொரு தலைப்பிலும் முதல் மூன்று இடங்களில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழை வழங்கி பாராட்டினார்.

 சிறப்பான வாய்ப்பினை வழங்கிய தமிழக முதலமைச்சர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், கல்வித்துறை உயர் அலுவலர்கள் மற்றும் தமிழக அரசுக்கு மாணவர்கள் நன்றி தெரிவித்தனர்.

அதனைத்தொடர்ந்து ஒவ்வொரு தலைப்பிலும் முதலிடம் பெற்றவர்கள் அடுத்த வாரம் முதல் சென்னையில் நடை பெறும் மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட  உள்ளனர்.

பின்னர் மாநில அளவிலான போட்டியில் தேர்வு செய்யப் படுபவர்கள் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் கல்விச் சுற்றுலாவாக வெளிநாடு அழைத்துச் செல்லப்படு வார்கள்.

பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் முருகையன், ராஜூ, முதன்மைக்கல்வி அலுவலக பள்ளித் துணை ஆய்வாளர் கி. வேலுச்சாமி, புதுக்கோட்டை பள்ளித்துணை ஆய்வாளர் குரு.மாரிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top