Close
ஜூலை 4, 2024 5:15 மணி

சர்வதேச அபாகஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்

புதுக்கோட்டை

சர்வதேச அபாகஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற மாணவர்களை வாழ்த்துகிறார், முதல்வர் தங்கம்மூர்த்தி

சர்வதேச அபாகஸ் போட்டியில்  வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாம்பியன் பட்டம் வென்ற னர்.

புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல் நிலைப் பள்ளி மாணவர்கள் சர்வதேச அபாகஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றனர்.

சென்னையில் இயங்கி வரும் அமாட்டா நிறுவனம் 20 -ஆவது சர்வதேச அபாகஸ், வேதிக் மேக்ஸ் போட்டிகளை இணையவழியில் நடத்தியது. சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 2000 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இதில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியைச் சேரந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி அ.அ. அட்சயாஸ்ரீ, ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் ஏ.அனம்தா, எம்.ஜி.சர்வேஸ்வர், ஆர்.சர்வேஷ்வரன், எம்.கிருத்தீஸ்வரன், மூன்றாம் வகுப்பு கே. ஜெயந்தா ஆகி;யோர் சேம்பியன் ஆப் சேம்பியன் பட்டம் வென்றனர்.

ஏழாம் வகுப்பு மாணவன் எம்.திருக்குமரன் டாப்பர் பரிசு பெற்றுள்ளார். சர்வதேச அபாகஸ் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி பரிசுகள் வழங்கி பாராட்டினார். அபாகஸில் சேம்பியன் பட்டம் வென்ற மாணவர்களுக்கு  பள்ளியின் அபாகஸ் ஆசிரியை புவனேஸ்வரி பாண்டியன் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top