Close
ஜூலை 7, 2024 9:43 காலை

சர்வதேச மகளிர் தினத்தில் மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்த மாணவர்கள் !!

புதுக்கோட்டை

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சம மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்த வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள்

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
மாணவர்கள் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தங்களோடு பயிலும் சக மாணவிகளுக்குஇனிப்புகள் வழங்கி மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்தனர். தங்களுக்கு வாழ்த்துகள்தெரிவித்த மாணவர்களுக்கு மாணவிகள் மகிழ்வுடன் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

தன்னுடைய கவிதைகளில் கட்டுரைகளில் மேடைப் பேச்சுகளில் பெண் கல்வி.
பெண்ணுரிமை, ஆண், பெண் சமத்துவம் பொன்ற கருத்துகளை தொடர்ந்து முழங்கி வரும்பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி கூறும்போது ”பள்ளிப் பருவத்திலேயே ஆண்குழந்தைகளை பெண் குழந்தைகளை தனித்தனி கூண்டுக்குள் பிரித்து வைக்காமல் ஒன்றுகலந்து சகோதரத்துவத்தோடு சகஜமாகப் பழகுவதற்கு கற்றுத் தர வேண்டும் வாய்ப்பளிக்க வேண்டும்.  அப்படி செய்வதன் மூலம் பெண்களுக்கு எதிரான கொடுமைகளிலிருந்துஅவர்களைப் பாதுகாக்க முடியும் என்று தெரிவித்தார்.

முன்னதாக மகளிர் தினத்தைமுன்னிட்டு பள்ளியின் அனைத்து மகளிர் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாதபணியாளர்களுக்கு நினைவு பரிசுகளும் இனிப்புகளும் வழங்கி வாழ்த்துகள் தெரிவித்தார் .பள்ளியில் பயிலும் சக மாணவிகளுக்கு மாணவர்கள் மகளிர் தின வாழ்த்துகள் கூறிஇனிப்பு வழங்கியது பலராலும் பாராட்டப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top