Close
ஜூலை 7, 2024 9:13 காலை

பிளஸ்2   தேர்வில் திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி தொடர்ந்து 23 ஆண்டுகளாக  100 % தேர்ச்சி

புதுக்கோட்டை

பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவியை வாழ்துக்கிறார், பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி

பிளஸ்2   தேர்வில் திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி தொடர்ந்து 23 ஆண்டுகளாக  100 % தேர்ச்சி பெற்று சாதனை படைத்து வருகிறது.

புதுக்கோட்டை, திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்2 வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் வழக்கம்போல் 100%  தேர்ச்சி அடைந்துள்ளார்கள். மாணவர்கள் 33, மாணவிகள் 30 மொத்தம் தேர்வு எழுதிய 63 பேரும் வெற்றி பெற்றுள்ளார்கள்.

 மாணவிகள் தர்ஷனா, ரிஷிகாஹரிணி,ஆனந்தநாயகி, ஹரிணிபிரியா, பசுமதிஆகியோர் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.மேலும், ஆனந்தநாயகி, நர்மதா, ஜெயஸ்ரீ, அருணாச்சலம் ஆகியோர்கணினிஅறிவியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர். தர்ஷினி கணினிப்பயன்பாடு பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்பெற்றுள்ளார்.

புதுக்கோட்டை
பிளஸ்2 தேர்வில் சிறப்பிடம் பெற்ற புதுகை வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள்

கே.கே.தர்ஷனா பொருளியல்; பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளார். ரிஷிகாஹரிணி வணிகவியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளார்.

வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் முதல்வர் தங்கம் மூர்த்திரூபவ் பள்ளியின்ஆலோசகர் அஞ்சலிதேவி தங்கம்மூர்த்தி, நிர்வாக இயக்குநர் நிவேதிதா மூர்த்தி, இயக்குநர் சுதர்சன், துணைமுதல்வர் குமாரவேல், ஒருங்கிணைப்பாளர்கள் அபிராமசுந்தரி,கௌரி, ஆசிரியர்கள் கமல்ராஜ், துர்காதேவி, கோகிலா, சுகுணா, ராஜாமணி, ஜெயசுதா,

சரவணபவா,  சின்னையா, சத்தியராஜ், ஆறுமுகம், செல்வராஜ், ரவிக்குமார், பால்ராஜ்,பாலமுருகன் மற்றும் மேலாளர் ராஜா, காசாவயல் கண்ணன், உதயகுமார், சரசு ஆகியோர் பாராட்டி இனிப்புகள் வழங்கினர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மதிப்பெண்களை மட்டுமல்ல மதிப்புமிக்க எண்ணங்களை வளர்க்கும் பள்ளி என பெற்றோர்கள்வெகுவாக பாராட்டினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top