Close
மார்ச் 7, 2026 11:29 காலை

30 ஆண்டுகளுக்கு பின் காரைக்குடியில் ஒன்று கூடிய அழகப்ப செட்டியார் பொறியியல் கல்லூரி  எம்சிஏ  முன்னாள் மாணவர்கள்..!

காரைக்குடி

காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் 30 ஆண்டுகளுக்குப்பின் சந்திப்பு விழா

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம்,  காரைக்குடி அழகப்ப செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் (ACCET) MCA 1992–1995 வரை பயின்ற  முன்னாள் மாணவர்கள்,  தங்களது கல்லூரி பருவ காலநினைவுகள்,  பரிமாறிக்கொள்ளும் விதமாக  30 ஆண்டுகளுக்குப்பின் ஒன்றுகூடி தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

கல்லூரியின் முதல்வர் டாக்டர் பாஸ்கரன்  தனது தலைமை  உரையில் அவர், பழைய மாணவர்களின் வளர்ச்சியும், கல்லூரியில் அமைந்துள்ள வலுவான கல்விக் கட்டமைப்பின் பங்கையும் வலியுறுத்தி பேசினார்.

டாக்டர் சிவானந்த ராஜா, வாழ்க்கை முழுவதும் கற்றல் தொடர வேண்டிய முக்கியத்துவத்தை பகிர்ந்ததோடு, தொழில்நுட்ப வளர்ச்சியில் நீடித்த முயற்சி எவ்வாறு  முக்கியப் பங்காற்றுகிறது  என்பதை விவரித்தார். பழைய மாணவர் சங்க செயலாளர் டாக்டர் செந்தில் குமார், பழைய மாணவர்கள் இடையே தொடரும் உறவுகளின் மதிப்பை  எடுத்துரைத்தார்.

காரைக்குடி
அழகப்பா பொறியியல் கல்லூரி எம்சிஏ முன்னாள் மாணவர்கள் கல்லூரியில் அமைத்துக்கொடுத்த Incubation Center’

டாக்டர் ஜஹீர் ஹுசைன், 1990 -களில் நிகழ்ந்த எம்சிஏ  லாப் நாட்கள், மாணவர்களின் உற்சாகம் மற்றும் பிணைப்பை நினைவு கூர்ந்தார். டாக்டர் ரவி குமார், எம்சிஏ மாணவர்கள் வாழ்க்கையில் எப்படி வெவ்வேறு துறைகளில் நிலைபெற்றுள்ளனர் என்பதைக் குறிப்பிட்டார்.

பின்னர் தேநீர் இடைவேளையில், கேக் வெட்டும் விழா நடைபெற்றது. இதைத் தொடர்ந்து நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, பழைய மாணவர்கள் மிகுந்த பெருமையுடன் ‘Incubation Center’ யை கல்லூரிக்காகத் தொடங்கி வைத்தனர். இது, தொழில்முனைவு மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான மேடையாக அமையும்.

காரைக்குடி
அழகப்பா பொறியியல் கல்லூரி எம்சிஏ முன்னாள் மாணவர்கள்

பிற்பகல் நிகழ்வில், தற்போதைய மாணவர்களுடன் ‘Mentoring Sessions’ நடத்தப்பட்டன.  பழைய மாணவர்கள் தங்கள் தொழில்துறையின் அனுபவங்களைப் பகிர்ந்ததோடு, மாணவர்களுக்கான ஊக்கத்தையும் வழங்கினர். இதில், அமெரிக்காவில் பணியாற்றும்  முன்னாள் மாணவர்கள் 22 பேர் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியை, எம்சிஏ  1992–1995  ஆண்டுகளில் படித்த  பழைய மாணவர்கள் ஒருங்கிணைத்து  நடத்தினர். நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்களும், பேராசிரியர்களும், தற்போதைய மாணவர்களும் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top