Close
செப்டம்பர் 20, 2024 5:45 காலை

ஏப்.21 ல் புதுக்கோட்டை அரசு ஐடிஐ -ல் தொழில் பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம்: ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அரசு ஐடிஐ-ல் தொழில் பழகுநர் சேர்க்கை முகாம்

புதுக்கோட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற் பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம் 21.04.2022 அன்று நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு  வெளியிட்ட தகவல்:

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் ஐடிஐ- களில்  படித்து, அகில இந்திய தொழிற் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்காக வருகின்ற 21.04.2022 அன்று காலை 9  மணிமுதல் மாலை 3  மணிவரை தொழிற்பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம் புதுக்கோட்டையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் அரசு மற்றும் தனியார் துறையைச் சார்ந்த பல முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களது நிறுவன ங்களுக்கு தேவையான தொழில் பழகுநர்களை தேர்வு செய்ய உள்ளனர்.இதில் கலந்துகொள்ள உள்ள மாணவ, மாணவிகள் தங்களது அசல் கல்விச் சான்றிதழ்களை கொண்டுவர வேண்டும்.

தொழில் பழகுநராக தேர்வு செய்யப்படும் மாணவ-மாணவிக ளுக்காக மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படும். தொழில் பழகுநர் பயிற்சியின் முடிவில் மத்திய அரசால் சான்றிதழும் வழங்கப்படும் என  ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top