Close
செப்டம்பர் 20, 2024 1:27 காலை

மேலைச்சிவபுரி கணேசர் கல்லூரிக்கு மத்திய அரசின் விருது

பொன்னமராவதி

மத்திய அரசின் விருதை பெற்ற மேலைச்சிவபுரி கணேசர் கல்லூரி முதல்வர் செல்வராசு

புதுக்கோட்டை மாவட்டம்,  பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரி மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் உயர்கல்வித் துறையின் சார்பில் வழங்கப்படும் கிரீன் சாம்பியன் விருதினை பெற்றுள்ளது.

மகாத்மா காந்தி கிராமப்புற கல்வி குழு புதுக்கோட்டை மாவட்ட அளவிலுள்ள கல்லூரிகளில் பசுமையாகக் கல்லூரி வளாகத்தைப் பராமரிக்கும் கல்லூரி என மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரி தேர்ந்தெடுக்கப்பட்டது.

திருச்சி ஹோலி கிராஸ் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற விழாவில், மத்திய அரசின் மகாத்மா காந்தி கிராமப்புற கல்வி குழுவின் தலைவர் டாக்டர்பிரசன்னகுமார், கணேசர் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் ம.செல்வராசுவிடம் பாராட்டு நற்சான்றிதழை வழங்கினார்.

இதில் கல்லூரி முதல்வர், உடற்கல்வி இயக்குனர் முனைவர் ம.சுரேஷ்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top