Close
செப்டம்பர் 20, 2024 5:26 காலை

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்புக்கூட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப் புக் கூட்டம் நடக்கிறது

புதுக்கோட்டை மாவட்டத்தில் 290 அரசு ஊராட்சி மற்றும் நகராட்சி நடுநிலைப்பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்புக் கூட்டம் (23.04.2022) சனிக்கிழமை  நடைபெறுகிறது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்ட தகவல்:

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 290 அரசு ஊராட்சி மற்றும் நகராட்சி நடுநிலைப்பள்ளிகளில் 23.04.2022 சனிக்கிழமை இன்று மதியம் 2 மணி அளவில் பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்தபள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்புக் கூட்ட நிகழ்வில் அரசு நடுநிலைப்பள்ளிகளில் பயிலக்கூடிய மாணவர்களின் பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டு தலைவர், துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து மறுகட்டமைப்பு நிகழ்வை சிறப்பாக நடத்திட தங்களின் 100 சதவீத பங்களிப்பை வழங்க வேண்டுமென ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

பள்ளி மேலாண்மைக் குழு என்பது இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள பள்ளிகளில், பள்ளியின் செயல்பாடுகளை மேலாண்மை செய்வதற்காகக் கட்டாய கல்வி உரிமைச்சட்டம் 2009- இன் படி ஏற்படுத்தப்பட்ட குழு ஆகும்.  பள்ளி வளர்ச்சியில் கவனம் செலுத்துதல், சமுதாயத்துக்கும் தொடர்பு ஊடகமாக இருந்து பணிகளை மேற்கொள்ளும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top