Close
செப்டம்பர் 19, 2024 11:26 மணி

மேலப்பட்டி ஊராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு பிரியாவிடை

புதுக்கோட்டை

மேலப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற பிரியாவிடை விழா

புதுக்கோட்டை அருகே மேலப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பள்ளியில் நடைபெற்ற  பிரிவு உபசார விழா வில் ஆனந்தக் கண்ணீருடன் மாணவர்களுடன் பிரியா விடை பெற்று சென்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், மேலப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 2021- 22 -ஆம் கல்வியாண்டின் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பிரிவு உபசார விழா நடைபெற்றது.

விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சீத்தாலெட்சுமி தலைமை  வகித்தார் .அறிவியியல்  ஆசிரியர் மகேஸ்வரன் அனைவரையும்  வரவேற்றார்.

 எட்டாம் வகுப்பு மாணவர்கள்கேசவன், உதயநிதி ரித்திகாஸ்ரீ , ஸ்ரீநாத், சத்தியா  தங்களுடைய  பள்ளிக்கூட  அனுபவங்களை பேசினர். பின்னர் ஆசிரியர்களுடன் மாணவர்களும் கேக் வெட்டி  மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.

ஆசிரியர்கள் சரவணன் , ஜெயந்தி , இந்திரா, ஜெயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தி பேசினர்.  நிகழ்ச்சியின் நிறைவாக மாணவர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி  விழா இனிதே நிறைவுற்றது. ஆசிரியர் சரவணன் நன்றி கூறினார். மாணவ, மாணவிகளின்  பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top