Close
செப்டம்பர் 20, 2024 1:44 காலை

பள்ளிகள் திறப்பு : மாணவிகளை நேரில் சந்தித்து வாழ்த்திய ஆட்சியர் கவிதாராமு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேனிலைப்பள்ளி மாணவிகளை சந்தித்து வாழ்த்திய ஆட்சியர் கவிதாராமு

2022-23 ஆம் கல்வியாண்டிற்கான பள்ளிகள் திறப்பினை யொட்டி புதுக்கோட்டை அரசு இராணியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியினை மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு நேரில் சந்தித்து மாணவிகளின் கற்றல் திறனை கேட்டறிந்தார்.

2022-23 -ஆம் கல்வியாண்டிற்கான பள்ளிகள் திறப்பினை யொட்டி, புதுக்கோட்டை அரசு இராணியார் மகளிர் மேல்நிலைப் பள்ளியினை, மாவட்ட ஆட்சியர்  கவிதாராமு (13.06.2022) நேரில் பார்வையிட்டு, புதிய மாணவிகளின் சேர்க்கையினை ஆய்வு மேற்கொண்டார்.

கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளி திறப்பினையொட்டி, 9, 10  -ஆம் வகுப்பு மாணவிகளை நேரில் சந்தித்து  அவர்களின் கற்றல் திறனை கேட்டறிந்தார். மேலும் 9, 10 -ஆம் வகுப்பு மாணவிகளுக்கு விலையில்லா புத்தகங்களை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வழங்கி, கல்வியில் சிறந்து விளங்க வேண்டுமென வாழ்த்தினார்.

இந்நிகழ்வில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ.மணிவண்ணன், வருவாய் கோட்டாட்சியர்; அபிநயா, பள்ளி துணை ஆய்வாளர் குருமாரிமுத்து, பள்ளி தலைமையாசிரியர் ஆர்.தமிழரசி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top