Close
செப்டம்பர் 19, 2024 11:26 மணி

பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை: ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அரசு பார்வையற்றோர் நடுநிலைப்பள்ளி

பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.

உங்கள் அருகில் உள்ள 5 வயது முதல் 13 வயது வரை உள்ள குழந்தைகள் 40 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை கண்பார்வையில் குறைபாடு உடையவர்களாக இருந்தால் இவர்களுக்கான எதிர்காலம் சிறப்பாக அமைய தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை கொண்டு இலவச கல்வி வழங்கப்பட்டு வருகிறது. இந்த அரசு சிறப்பு பள்ளி தங்கும் விடுதியுடன் புதுக்கோட்டையில் செயல்பட்டு வருகிறது.

இப்பள்ளியில் பார்வை குறைபாடுடைய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையுடன் கணினி கற்றுத்தரப்படும், ஆண்டுக்கு ஒருமுறை கல்விச்சுற்றுலா, சத்தான உணவு, சீருடை, குழந்தைகளை பராமரிக்க விடுதிக்காப்பாளர், ஆயா மற்றும் சமையலர் பணியாற்றி வருகிறார்கள். மேற்கண்ட அனைத்தும் இலவசமாக வழங்கும் அரசு சிறப்புப் பள்ளியில் 2022-2023 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.

பார்வை குறைபாடுடைய மாணவர்களை பள்ளியில் சேர்க்க தலைமை ஆசிரியரை 9499933248, 04322 226452, 9840272383 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம். பள்ளியின் முகவரி: பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி எம்எல்ஏ அலுவலகம் அருகில், புதியபேருந்து நிலையம், புதுக்கோட்டை 622001 – என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top