Close
செப்டம்பர் 20, 2024 1:18 காலை

புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் 8-வது சர்வதேச யோகா தினவிழா

புதுக்கோட்டை

புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் 8 -ஆவது சர்வதேச யோகா தினவிழா கொண்டாடப்பட்டது.

புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் 8 -ஆவது சர்வதேச யோகா தினவிழா கொண்டாடப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்ட நேரு யுவக்கேந்திரா, ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி, ஆத்மா யோகா மாணவர் மன்றம் இணைந்து நடத்திய 8-வது சர்வதேச யோகா தின விழாவிற்கு பள்ளியின் முதல்வர் தமிழ்செம்மல் தங்கம் மூர்த்தி அவர்கள் தலைமை வகித்தார்.

ஆத்மா யோகா நிறுவனர் யோகாச்சார்யா ரெ. பாண்டியன் வரவேற்புரை நிகழ்த்தினர். சர்வதேச யோகா விழாவும் யோகவின் சிறப்பும் குறித்து மாவட்ட இளைஞர் நலன் அலுவலர் ஜோயல் பிரபாகர் சிறப்புரையாற்றினார்.

புதுக்கோட்டை
புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த சர்வதேசயோகா நாள் விழா

யோகாவின் மருத்துவ பயன்பாடு மற்றும் மருத்துவத் துறையில் யோகா என்ற தலைப்புகளில் அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனை இயற்கை மற்றும் யோகா மருத்துவ ஆலோசகர் அருணா சுந்தரி , ஆலங்குடி அரசு மருத்துவமனை இயற்கை மற்றும் யோகா மருத்துவ ஆலோசகர் பி. கீதா  ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

ஆத்மா யோகா மையத்தின் செயலாளர் புவனேஸ்வரி பாண்டியன் நன்றி கூறினார்.  ஏற்பாடுகளைதுணை முதல்வர் குமாரவேல், ஒருங்கிணைப்பாளர் கௌரி மற்றும் ஆசிரியை சுகுணா ஆகியோர் செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top