Close
செப்டம்பர் 20, 2024 4:07 காலை

11 -ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 100 %  தேர்ச்சி

புதுக்கோட்டை

11- ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்ற மாணவர், மாணவியை வாழ்த்திய திருக்கோகர்ணம் வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி முதல்வர் தங்கம் மூர்த்தி

11 -ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் திருக்கோகர்ணம்
ஸ்ரீவெங்கடேஸ்வராமெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 100 %  தேர்ச்சி மற்றும் மாவட்டத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர்

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பதினோறாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் வழக்கம்போல் நூறு சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளார்கள். பெறும்பாலான மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

கா.ஆயிஷா ஷிபானா  600-க்கு (586 ), ஆர்.எம். ஆவிச்சி விஸ்வநாதன் ( 600-க்கு 585), பொ. முத்துவடிவேல் (565 ஃ 600), ச. அருணன்  (600-க்கு 563), ம. அவினாஸ் ( 600-க்கு 549 ), நா.வெங்கடேஸ்வரன் (600-க்கு 546 ), வெ.கோமதி (600-க்கு 543), க.ஸ்வோதா (600-க்கு 534), பா.சுபஸ்ரீ ( 600-க்கு (520) ஆகியோர் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

மேலும், ஆயிஷா ஷிபானா, கணிணிப் பயன்பாடு, கணக்குப் பதிவியல் பொருளியல் ஆகிய மூன்று பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளார்.

ஆவிச்சி விஸ்வநாதன் பொருளியல் மற்றும் வணிக கணிதம் ஆகிய இரண்டு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளார்

வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் முதல்வர் தங்கம் மூர்த்தி, பள்ளியின் ஆலோசகர் அஞ்சலிதேவி தங்கம்மூர்த்தி, நிர்வாக இயக்குநர் நிவேதிதா மூர்த்தி, துணைமுதல்வர் குமாரவேல், ஆசிரியர்கள், அபிராமசுந்தரி, கமல்ராஜ், சுதா, கோகிலா, ராஜாமணி, ஜெயசுதா, அழகன், பிரகாஷ், சின்னையா, சத்தியராஜ், ஆறுமுகம், கார;த்திகா மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் கெளரி, பவானி ஆகியோர் பாராட்டி இனிப்புகள் வழங்கினர்..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top