Close
செப்டம்பர் 20, 2024 4:00 காலை

கம்பன் கழக போட்டிகள்: 9 -ஆவது ஆண்டாக அதிக பரிசுகள் வென்ற ஶ்ரீவெங்கடேஸ்வராமெட்ரிக்.பள்ளி

புதுக்கோட்டை

புதுக்கோட்டை கம்பன் கழகம் நடத்திய போட்டியில் அதிக பரிசை வென்ற வெங்கடேஸ்வரா மெட்ரிக். பள்ளிக்கு கோப்பையை வழங்கிய உச்சநீதிமன்ற நீதியரசர் வெ.ராமசுப்பிரமணியன். உடன் உயர்நீதிமன்ற நீதியரசர் ஆர். சுரேஷ்குமார், கம்பன் கழக நிர்வாகிகள்

கம்பன் கழகம் சார்பில் நடத்தப்பட்ட பல்கலைப் போட்டிகளில் தொடர்ந்து 9 -ஆவது ஆண்டாக அதிக பரிசுகள் வென்று புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஶ்ரீவெங்கடேஸ்வராமெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி சாதனை படைத்தது.

கம்பன்கழக வெற்றிக்கோப்பை தொடர்ந்து ஒன்பதாவது ஆண்டாக அதிகப் பரிசுகளைப் பெற்ற பள்ளியாக ஶ்ரீவெங்கடேஸ்வராமெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி சாதனை படைத்துள்ளது.

புதுக்கோட்டையில் டவுன் ஹாலில் சனிக்கிழமை நடைபெற்ற கம்பன் விழாவில்,  உயர்நீதிமன்ற நீதியரசர் ஆர். சுரேஷ்குமார்  முன்னிலையில்,  உச்சநீதிமன்ற நீதியரசர் வெ. ராமசுப்பிரமணியன் அவர்களின் திருக்கரங்களால் வெற்றிக் கோப்பையை பெற்று  பள்ளி பெருமையடைகிறது.

கோப்பையை, பள்ளிதுணை முதல்வர் எஸ். குமாரவேல் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பெற்றார்கள் எபுதுக்கோட்டைன  நிகழாண்டில்  பெற்ற மொத்தப் பரிசுகள் 22 ஆகும்.

பரிசு பெற்ற மாணவர்களை கம்பன் கழக தலைவர் SR என்ற ராமச்சந்திரன், செயலர் ரா. சம்பத்குமார் மற்றும் கம்பன் கழக நிர்வாகிகள் மற்றும் பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி ஆகியோர் வாழ்த்தினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top