Close
செப்டம்பர் 20, 2024 1:35 காலை

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரியில் 108 அவசர ஊர்தி விழிப்புணர்வு முகாம்

ஈரோடு

ஈரோடு கலை அறிவியல் கல்லூரியில் நடந்த 108 ஊர்தி விழிப்புணர்வு முகாம்

ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சமூகப்பணித்துறை மற்றும் ஏகம் அறக்கட்டளை (EKAM Foundation) இணைந்து 108 அவசர ஊர்தி (Ambulance – 108) பற்றிய விழிப்புணர்வு மற்றும் செயல்முறை நிகழ்ச்சி நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியினை கல்லூரி முதல்வர் முனைவர்  ரா. சங்கர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார், கல்லூரி இயக்குநர் ரா. வெங்கடாசலம் கருத்துரை வழங்கினார்.

பின்னர் அவசர ஊர்தி பற்றிய விழிப்புணர்வு மற்றும் செயல்முறை விளக்கங்களை ஜெகன் ராஜ்,  பிரதீப் மற்றும் அருண் குமார்  ஆகியோர் விளக்கவுரையாற்றினர். நிகழ்ச்சியில் 150 – மேற்பட்ட மாணவ – மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். நிகழ்ச்சியை முனைவர் அ. பகவதி ராஜா,   த. ஷர்மிளாபானு மற்றும் சமூகப்பணித்துறை மாணவர்கள் ஒருங்கிணைத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top