Close
செப்டம்பர் 20, 2024 4:15 காலை

புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தில் பணி வாய்ப்பு

வேலை வாய்ப்பு

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் பணி வாய்ப்பு

புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் கீழ் இயங்க உள்ள குற்ற வழக்கு எதிர்வாத சட்ட உதவி அலுவலகத்தில் (Legal Aid Defense Counsel System), இதன் அடியில் கண்ட விவரப்படிக்கு பணியிடங்கள் உருவாக்கப்பட்டு நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு, அப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.

1. அலுவலக உதவியாளர்/எழுத்தர். – பணியிடம் – 2
Office Assistants/Clerks – Posts-2
2. வரவேற்பாளர் மற்றும் தரவு பதிவாளர் (தட்டச்சர்) – பணியிடம் -1 Receptionist cum Data Entry Operator (Typist) – Post – 1
3. அலுவலக பணியாளர்/உதவியாளர் பணியிடம் – 1 Office Peon (Munshi/Attendant) – Post – 1.

புதிதாக உருவாக்கப்படவுள்ள இந்த Legal Aid Defense Counsel System -ல், மேற்கண்ட பதவிகளுக்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள்  வரவேற்கப்படுகின்றன
முழுத்தகவல்களை https://districts.ecourts.gov.in/pudukkottai  என்ற இணையதளத்தில் “Latest Announcement” என்ற தலைப்பில் விவரமாக குறிப்பிடப் பட்டுள்ளது. விருப்பமுள்ள தகுதி வாய்ந்த நபர்கள் மேற்படி இணையதள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதனை முறையாக பூர்த்தி செய்து வரும் 18.08.2023-ஆம் தேதி மாலை 5.00 மணிக்குள்
தலைவர் / முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம், புதுக்கோட்டை” என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். இறுதி தேதிக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

தகுதியான விண்ணப்பங்களின் அடிப்படையில் சம்பந்தப் பட்ட விண்ணப்பதாரர்கள் வரும் 02.09.2023 தேதி காலை 10 மணிக்கு புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்குள் இருக்கும் சமரச தீர்வு மைய அலுவலகத்தில் நடைபெறும் (ADR Building) நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர். இத்தகவலை  புதுக்கோட்டை  மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய  தலைவர்/ தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top