Close
செப்டம்பர் 19, 2024 10:53 மணி

புதுக்கோட்டை அரசு ஐடிஐ -ல் தற்காலிக பயிற்றுநர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அரசு ஐடிஐ-ல் வேலை வாய்ப்பு

புதுக்கோட்டை அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் பொது மற்றும் தனியார் கூட்டமைப்பு திட்டத்தின்கீழ் காலியாக உள்ள தற்காலிக பயிற்றுநர் பணியிடம் நிரப்புவதற்கு கீழ்க்கண்ட தகுதியின்படி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்றுநர் (Welder) – 1 எண், கல்வித் தகுதி தேசிய தொழிற் சான்றிதழ் மற்றும் தேசிய தொழிற்பழகுநர்(NTC/NAC) சான்றிதழுடன் பற்றவைப்பவர் துறையில் 3 வருடம் பணி அனுபவம் அல்லது DME படிப்புடன் 2 வருடம் பணி அனுபவம் அல்லது B.E(Mechancal) பட்டபடிப்புடன் 1 வருடம் பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். ஒப்பந்த மாத ஊதியம் ரூ.20,000/- ஆகும்.
பயிற்றுநர் (Fitter)- 2 எண், கல்வித் தகுதி தேசிய தொழிற் சான்றிதழ் மற்றும் தேசிய தொழிற்பழகுநர் (NTC/NAC) சான்றிதழுடன் பொருத்துநர் துறையில் 3 வருடம் பணி அனுபவம் அல்லது DME படிப்புடன் 2 வருடம் பணி அனுபவம் அல்லது B.E(Mechancal) பட்டபடிப்புடன் 1 வருடம் பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

ஒப்பந்த மாத ஊதியம் ரூ.20,000/- ஆகும். (வயது வரம்பு, அரசு விதிகளின்படி)விண்ணப்பங்களை, தலைவர்/செயலாளர், பொது மற்றும் தனியார் கூட்டமைப்பு (PPP) அரசு தொழிற் பயிற்சி நிலையம், புதுக்கோட்டை – 622 002 என்ற முகவரிக்கு வரும் 15.09.2023 மாலை 5.00 மணிக்குள் அனைத்து கல்வி சான்றிதழ் நகல்களுடன் அனுப்ப வேண்டும்.

எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு நடைபெறும் விவரம் பின்னர் தெரிவிக்கப்படும். தாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

மேற்கண்ட பதவிக்கான நியமனத்தை தள்ளி வைக்கவோ (அல்லது) ரத்து செய்திடவோ நியமன அலுவலருக்கு அதிகாரம் உள்ளது.மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top