Close
செப்டம்பர் 19, 2024 11:14 மணி

புதுக்கோட்டையில் ஆக.29 மற்றும் 30 -ல் டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில்   பெண்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்

புதுக்கோட்டை

பெண்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்

புதுக்கோட்டை: டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில்  பெண்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் வியாழன், வெள்ளி ஆகிய 2 நாட்கள் புதுக்கோட்டையில் நடைபெறுவதாக  மாவட்ட ஆட்சியர் மு.அருணா தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட தகவல்: புதுக்கோட்டை மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பு தேடும் பெண்களுக்கு ஒசூரில் செயல்பட்டு வரும் இந்தியாவின் முன்னணி தொழில் குழுமமான டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் புதுக்கோட்டை மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 29.8.2024 மற்றும் 30.8.2024 ஆகிய தேதிகளில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டி மையம், புதுக்கோட்டை  (அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் அருகில்) காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது.

இம்முகாமில் பன்னிரெண்டாம் வகுப்பு அல்லது ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம், கூடுதல் கல்வித்தகுதி (பட்டப்படிப்பு) இல்லாதவராக இருத்தல் வேண்டும். வேறு எந்தவொரு நிறுவனத்திலும் பணிபுரிந்தவராக இருத்தல் கூடாது. வயது வரம்பு 18 முதல் 23 வயதிற்குட்பட்வர்களாகவும் இருத்தல் வேண்டும். இப்பயிற்சியினை வெற்றிகரமாக முடித்தபின் நம்பிக்கைக்கு உகந்த பாதுகாப்பான சூழலில் வேலைவாய்ப்பும், மாதாந்திர சம்பளமாக ரூ.12,000 -ம் வழங்கப்படும்.  உணவு, தங்குமிடம், போக்குவரத்துவசதி ஆகியவை சம்பந்தப்பட்ட நிறுவனத்தால் வழங்கப்படும்.

 புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த படித்த தகுதியுடைய விருப்பமுள்ள பெண்கள் தங்களது 10 -ஆம்  வகுப்பு மற்றும் 12 -ஆம்  வகுப்பு கல்விச் சான்று, மாற்றுச்சான்றிதழ் (டிசி), ஆதார் அட்டை மற்றும் சுயவிவரக்குறிப்பு அசல் மற்றும் நகல் சான்றுடன் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் கலந்துகொண்டு பயன்பெறலாம். இம்முகாம் மூலம் தனியார்துறையில் வேலைவாய்ப்பு பெறுவதால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணம் கொண்டும் ரத்து செய்யப்பட மாட்டாது.  இத்தனியார்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top