Close
செப்டம்பர் 20, 2024 3:35 காலை

குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதாராமு

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்தில் சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் (Legal cum Probation Officer) பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மாவட்ட ஆட்சித் தலைவர்கவிதா ராமு வெளியிட்ட தகவல்:

தமிழ்நாடு அரசு, சமூகப்பாதுகாப்புத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்தில் சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர்(Legal cum Probation Officer) பணியிடம் முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூ.21,000 -ம் (ரூபாய் இருபத்தி ஓராயிரம் மட்டும்) வீதம் தொகுப்பூதியத்தில் பணியாற்றிட புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இப்பணியிடத்திற்கான கல்வி தகுதி இளங்கலை சட்டப்படிப்பு (10+2+3) B.L அல்லது  LLB (Regular) ஆகும். குழந்தைகள் நலம், சமூக நலம், தொழிலாளர் நலம் ஆகிய சட்டம் சார்ந்த பணிகளில் ஒரு வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.  இப்பணியிடத்திற்கு 40 வயதிற்குட்பட்டவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் ; www.pudukkottai.tn.nic.in  என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை அனைத்து சான்றிதழ்களின் நகல்களுடன் இணைத்து 08.04.2022 அன்று மாலை 5.30 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, முன்னாள் படை வீரர்கள் மைய வளாகம், கல்யாணராமபுரம் 1-ஆம் வீதி, புதுக்கோட்டை-622 002. தொலைபேசி எண்:04322-221266. என்ற முகவரிக்கு வந்து சேருமாறு அனுப்பி வைத்தல் வேண்டும். 08.04.2022-க்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

—————————————————————————————————————-

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top