Close
செப்டம்பர் 19, 2024 11:10 மணி

புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வளாக நேர்காணல்: 121 பேர் தேர்வு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அரசு ஐடிஐ -ல் நடைபெற்ற வளாக நேர்காணல்

புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில்  (29/06/ 2022) இறுதியாண்டு பயிற்சியாளருக்கு வளாக நேர்காணல் நடைபெற்றது.

அரசினர் தொழிற்பயிற்சிநிலைய முதல்வர்  ராமர்  தலைமையில் நடைபெற்ற நேர்காணலில், சென்னை ஒரகடத்தில் இயங்கி வரும் ராயல் என்பீல்டு புல்லட் நிறுவனத்திலிருந்து மனிதவள மேம்பாட்டு துறை மேலாளர்  ராஜேஷ்குமார்  வருகை தந்து நேர்காணலை நடத்தினார்.

இதில், பயிற்சி நிலையத்தில் இறுதி ஆண்டு பயிற்சி பெற்று வரும் மோட்டார் மெக்கானிக், டீசல் மெக்கானிக், வெல்டர், பொருத்துனர், இயந்திர வேலையாள், வயர் மேன் ஆகிய பிரிவு பயிற்சியாளர்களை  தேர்வு செய்தார்.

நேர்காணலில் 155 பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் 121 பயிற்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  ஏற்பாடுகளை நிலைய பணியமர்த்தும் அலுவலர்கள்  கிருஷ்ணன் மற்றும்  விஜயகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top