Close
செப்டம்பர் 20, 2024 5:41 காலை

புதுக்கோட்டை மாவட்டத்தில் தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம் அனுசரிக்கப்படுகிறது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்ட தகவல்:
புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும்; மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், புதுக்கோட்டை சார்பாக எதிர்வரும் 11.07.2022 முதல் 15.07.2022 வரை  தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம் மற்றும் 15.07.2021 அன்று  தேசிய திறன் நாள்  அனுசரிக்கப்படுகிறது.

இதையொட்டி, மாற்றுத்திறனாளிகள், மகளிர், மூன்றாம் பாலினத்தவர், முன்கற்ற திறனை அங்கீகரித்தவர்கள் மற்றும் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கு உயர்கல்வி, போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, மெய்நிகர் கற்றல் வலைதளத்தில் பதிவு செய்தல், மென்பாடங்களை தரவிறக்கம் செய்தல், கல்வி தொலைக்காட்சி, Youtube channel – TN Career Services Employment திறன்பயிற்சி மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

மேலும், மாவட்ட திறன் பயிற்சி அலுவலர் மூலமாக முன்கற்ற தொழில்நுட்பம் அறிந்தவர்களில் உரிய சான்றுகள் இல்லாதோரை கண்டறிந்து அவர்களுக்கு பயிற்சி அளித்து அரசு சான்றிதழ் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. இவ்வலுவலக தன்னார்வ பயிலும் வட்டம் சார்பாக அரசு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் வல்லுநர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை மாவட்ட இளைஞர்கள் இந்நிகழ்ச்சி மற்றும் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை தொடர்பு கொள்ளலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top