Close
செப்டம்பர் 20, 2024 1:23 காலை

முன்னாள் பிரதமர் பண்டித  ஜவஹர்லால் நேரு பிறந்த நாள்..

இந்தியா

ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் இன்று

பண்டித ஜவஹர்லால் நேரு பிறந்தநாள் இன்று…

கல்வி, மருத்துவம், குடும்பக் கட்டுப்பாடு, பொருளாதாரம் , உள்கட்டமைப்பு இப்படி எதை எடுத்துக்கொண்டாலும் இன்று நாம் அறுவடை செய்துக் கொண்டு இருப்பது ஜவஹர்லால் நேரு  நட்டு வைத்த விதையால் தான். காந்தி ராமராஜ்யம் அமைக்க கனவு கண்டார். ஆனால் நவீன இந்தியாவை கட்டமைக்க முயன்றவர் நேரு. அதிலும் பெண்களுக்காக அவர் செய்தது பெரிய பட்டியல்.

அன்றைக்கு பெண் இருந்த நிலையை கணக்கில் கொண்டு பார்த்தால் அது மகத்தான சாதனையாகவே நமக்குப்படுகிறது.  பெண்களுக்கு சொத்துரிமை, விவாகரத்து செய்யும் உரிமை, தனியாக தத்தெடுக்கும் உரிமை, வேலைக்கு  போவது, தன் சம்பாதியத்தை தானே வைத்துக் கொள்ளும் உரிமை எதுவும் இல்லாத சூழல் நிலவிய காலம்.

பெண்களுக்கு இவற்றை பெறும் உரிமை இருந்ததில்லை. இந்த விதிகளை இந்தியாவை ஆண்ட முகலாய அரசர்கள் மட்டுமல்ல இந்து, சமண, பௌத்த அரசர்கள் கூட மாற்றத் துணியவில்லை.

பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த சோசியலிசத்தின் சிறந்த அம்சங்களை கொண்டு ஒரு பொருளாதார கொள்கையை வகுத்தார். அந்த கொள்கையின் படி நாட்டில் தொழிற்சாலைகள் மெல்ல மெல்ல வளர ஆரம்பித்தன.

நிலங்களை உழவு செய்பவர்களின் கையில் கொடுத்தமை, பசுமை புரட்சி, விவசாயிகளுக்கு கடன் உதவி போன்ற திட்டங்கள் கொண்டு வந்தமையால் நாட்டில் உணவு உற்பத்தி தன்னிறைவை பெற்றது. ஏகப்பட்ட அணைகளை கட்டியமையால் பாசன திட்டங்கள்  அபிவிருத்தி பெற்றன.

கல்வி என்பது கல்வியாளர்களை அல்லது அறிவை வளப்பதற்கு மட்டுமானதாக இருக்கக் கூடாது என்பதில் உறுதிபூண்டிருந்தார். கல்வி என்பது கலை, கலாச்சாரம் மற்றும் நமது பண்பாடுகளைத் தாங்கியது என்று நம்பினார். குழந்தைகளின் கல்வி மற்றும் உரிமைகளை காப்பதற்கு நேரு முன்னுரிமைக்கொடுத்தார். இவ்வாறான உயர் சிந்தனை பெற்றவர் என்பதாலேயே ஜவஹர்லால் நேரு,’ சுதந்திர இந்தியாவின் நவீன கல்வி முறையின் சிற்பி‘ என்று கருதப்பட்டார்.
நேரு தன்னுடைய வாழ்நாளில் ஒன்பது வருடங்கள் சிறையில் கழித்தார். நேரு சிறையில் இருந்த நாட்களில் ஒரு சில நூல்களை எழுதினார். உலக வரலாற்றின் காட்சிகள், சுயசரிதை, கண்டறிந்த இந்தியா.., போன்றவை.
இந்த படைப்புகள் ஒரு எழுத்தாளராக மட்டும் பெருமை சேர்க்காமல் அவருக்கு நல்ல பெயரையும் தேடி தந்தது.

நேரு அரசியல்வாதியானதால், நம் தேசம் ஒரு சிறந்த இலக்கியவாதியை இழந்துவிட்டது என்பது உண்மை..

…இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top