Close
செப்டம்பர் 20, 2024 4:08 காலை

ஓட்டுநர் இல்லாமல் 70கிமீ ஓடிய சரக்கு ரயில்..! விபத்து தவிர்ப்பு..!

ஓட்டுநர் இல்லாமல் ஓடிய ரயில்

ஓட்டுநர் இல்லாமல் 70 கிமீ ஓடிய சரக்கு ரயிலால் எந்த விபத்தும் ஏற்படவில்லை என்பது ஆறுதலுக்குரிய விஷயம். (சரக்கு..சரக்கு ரயில் என்பதால் -தானாகவே ஓடிவிட்டதோ..?)

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவாவில் இருந்து பஞ்சாபின் ஹோஷியார்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு ஞாயிற்றுக்கிழமை ஓட்டுநர் இல்லாமல் 53 வேகன் டீசல் சரக்குகள் ஏற்றப்பட்ட ரயில் சுமார் 80 கிலோமீட்டர் தூரம் பயணித்தது. சரக்கு ரயில், ஓட்டுநர் இல்லாமல், மணிக்கு 100 கிலோமீட்டர் (கிமீ) வேகத்தில் ஓடுவதாகக் கூறப்படும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. எமர்ஜென்சி பிரேக் பயன்படுத்தி நிறுத்தப்பட்டதால் பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது.

இன்று (பிப்ரவரி 25 ஆம் தேதி) காலை 7.25 மணி முதல் 9 மணி வரை நடந்த இந்தச் சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், உயிர்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என்றும் ரயில்வே தெரிவித்துள்ளது.

சரக்கு ரயில் ஜம்முவில் இருந்து பஞ்சாப் நோக்கி சிப் கற்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது.

முதற்கட்ட தகவலை மேற்கோள் காட்டி, வடக்கு ரயில்வேயின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், சரக்கு ரயில் ஜம்முவில் உள்ள கதுவா ரயில் நிலையத்தில் டிரைவர் மாற்றத்திற்காக நிறுத்தப்பட்டதாகவும், அது ஜம்மு-ஜலந்தர் பிரிவில் ஒரு சாய்வு பாதையில் உருளத் தொடங்கியதாகவும் தெரிகிறது.

லோகோ பைலட் மற்றும் அசிஸ்டன்ட் லோகோ பைலட் ஆகிய இரு டிரைவர்களும் சரக்கு ரயிலில் இல்லை என்று அதிகாரிகளை மேற்கோள்காட்டி பிடிஐ அறிக்கை தெரிவித்துள்ளது. ரயில் பாதையில் வேகம் பெற்றது, இறுதியாக பஞ்சாபில் உள்ள உஞ்சி பாசி ரயில் நிலையம் அருகே ஒரு செங்குத்தான சாய்வில் நின்றது.

“சம்பவத்திற்கான சரியான காரணத்தை அறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. முதல் பார்வையில், ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளர் இல்லாமல் ரயில் பஞ்சாப் நோக்கி  சாய்வில் உருளத் தொடங்கியது என்று தெரிகிறது” என்று ஜம்முவின் கோட்ட போக்குவரத்து மேலாளர் பிரதீக் ஸ்ரீவஸ்தவா பிடிஐ மேற்கோளிட்டுள்ளார் .

70 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தை கடந்த பிறகு, செங்குத்தான சாய்வு காரணமாக உஞ்சி பஸ்ஸி அருகே ரயில் நின்றது என்றும் அவர் கூறினார்.

ஜலந்தர்-பதான்கோட் வழித்தடத்தில் உள்ள அனைத்து ரயில்-சாலை கிராசிங்குகளும் விபத்தைத் தவிர்க்க உடனடியாக மூடப்பட்டன.

ரயில்வே போலீஸ் ஏஎஸ்ஐ குர்தேவ் சிங்கை மேற்கோள் காட்டி இந்துஸ்தான் டைம்ஸ் அறிக்கையின்படி, பாதையில் உள்ள அனைத்து ரயில்வே கிராசிங்குகளும் உடனடியாக சாலைப் போக்குவரத்திற்காக மூடப்பட்டன, மேலும் ரயிலின் வேகத்தைக் குறைக்க பல்வேறு இயந்திர முறைகள் பயன்படுத்தப்பட்டன.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த பெரோஸ்பூர் ரயில்வே கோட்ட அதிகாரிகள் சென்று கொண்டிருந்தனர்.

சரக்கு ரயில் ஓடிய வீடியோ

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top