உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் கமிட்டியை கூண்டோடு கலைத்து அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடந்து வருகிறது. சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ.கவை விட காங்கிரஸ், சமாஜ்வாதி கூட்டணி கட்சிகள் அதிக இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றன. ஆனால் சட்டசபைக்கு நடந்த இடைத்தேர்தல்களில் ஆளும் பா.ஜ.க அதிக இடங்களைக் கைப்பற்றியது.
இந்நிலையில், இன்று (6ம் தேதி ) உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் கமிட்டியை கூண்டோடு கலைப்பதாக அக்கட்சியின் தலைவர் கார்கே அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இது குறித்து, உத்தர பிரதேச காங்கிரஸ் சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் கமிட்டி முழுவதையும் உடனடியாக கலைப்பதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஒப்புதல் அளித்துள்ளார்.
2027ம் ஆண்டில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் புதிய கமிட்டி அமைக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுளளது. காங்கிரஸ் கட்சியை மறுசீரமைத்து புத்துயிர் ஊட்டுவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.