எலான் மஸ்க் இந்தியாவில் தொழிற்சாலை அமைத்தால் அது அமெரிக்காவுக்கு பெரிய அநீதியாக இருக்கும் என அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க் தனது டெஸ்லா நிறுவனம் சார்பில் இந்தியாவில் கார் தொழிற்சாலையை அமைத்தால் அது அமெரிக்காவுக்கு அநீதியானது என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து, பிரதமர் மோடியை தொழிலதிபர் எலான் மஸ்க் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பை அடுத்து, அமெரிக்காவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா இந்தியாவில் கால் பதிக்க ஆர்வமாக உள்ளதாகவும், இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியது.
இதன் தொடர்ச்சியாக, இந்தியாவில் வேலைக்கு ஆள் எடுப்பது தொடர்பான விளம்பரத்தை லிங்க்டு இன் பக்கத்தில் டெஸ்லா கடந்த திங்கள்கிழமை வெளியிட்டது. அதில் 13 பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டன.
இந்நிலையில், ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு நேற்று முன்தினம் (பிப். 18) பேட்டி அளித்த டொனால்ட் ட்ரம்ப், “இப்போது, அவர் இந்தியாவில் தொழிற்சாலையை அமைத்தால், அது நமக்கு (அமெரிக்காவுக்கு) அநீதியானது என்று தெரிவித்துள்ளார்.