Close
செப்டம்பர் 19, 2024 11:17 மணி

அகர்வால் கண் மருத்துவமனையில் உலக சர்க்கரை நோய் தின விழிப்புணர்வு பேரணி

மதுரை

மதுரை அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி

அகர்வால் கண் மருத்துவமனையில் உலக சர்க்கரை நோய் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

மதுரை நகர்,ஆரப்பாளையத்தில் உள்ள டாக்டர். அகர்வால் கண் மருத்துவமனை, அண்ணா ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட் இணைந்து உலக சர்க்கரை நோய் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இவ்விழாவில், டாக்டர். அகர்வால் கண் மருத்துவமனை டாக்டர் பத்திரிநாராயணன் மற்றும் டாக்டர் திவ்யா மற்றும் விழித்திரை சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு சர்க்கரை நோயினால் ஏற்படும் கண் பதிப்புகள் குறித்து பேசினார்கள்.

சிறப்பு அழைப்பாளராக போக்கு வரத்து ஆய்வாளர் கார்த்திக் கலந்து கொண்டு பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் அண்ணா ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட் மாணவர்கள் ஒன்றிணைந்து உலக சர்க்கரை நீரிழிவு தின விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top