Close
செப்டம்பர் 19, 2024 11:07 மணி

திமுக சார்பில் புதுக்கோட்டையில்   கண் மருத்துவ  பரிசோதனை முகாம்     

புதுக்கோட்டை

திமுக சார்பில் புதுகையில் நடந்த கண் பரிசோதனை முகாமை தொடக்கி வைத்த அமைச்சர் ரகுபுதி

திமுக சார்பில் புதுக்கோட்டை திருவப்பூரில்     கண் மருத்துவ  பரிசோதனை முகாம்  நடத்தப்பட்டது.

புதுக்கோட்டையில்  செஞ்சுரி லயன்ஸ் சங்கம் திருவப்பூர் 21 -ஆவது வட்ட திமுக மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை  இணைந்து நடத்திய திமுக மூத்த தலைவர் க.அன்பழகன் நூற்றாண்டு நிறைவு   இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.

திருவப்பூர் பாரத் மெட்ரிகுலேஷன் பள்ளியில்  நடைபெற்ற கண் பரிசோதனை முகாமை சட்டத்துறை அமைச்சர்     எஸ் .ரகுபதி  தொடக்கி வைத்தார்.   நகர் மன்ற தலைவி திலகவதி செந்தில்,  வடக்கு  திமுக மாவட்ட செயலர்  கே. கே. செல்ல பாண்டியன், நகரச்செயலர் ஆ.செந்தில்.

செஞ்சுரி  லயன்ஸ் சங்கத் தலைவர் அரவிந்த் ,பட்டயத் தலைவர் கண்ணன், நிர்வாகிகள் ரவிச்சந்திரன், அன்பு சண்முகம்,  எம்.சி. ரமேஷ்பாபு , மெகர்பானுநிஜாம், ரெத்தினம், எஸ். எஸ். பி. காஜா, ஜெ. கண்ணன், ரமேஷ்குமார், செல்வராஜ், பாரத் பள்ளி நிர்வாகி கருணைசெல்வி,   கண் பரிசோதனை முகாமில் 250 -க்கும் மேற்பட்டோர் கண் மருத்துவர்களிடம் பரிசோதனை செய்துகொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top