Close
செப்டம்பர் 19, 2024 11:12 மணி

புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி தலைமையில் மாவட்ட சுகாதாரப் பேரவை கூட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி தலைமையில் நடைபெற்ற மாவட்ட சுகாதாரப் பேரவையின் 2 -வது கூட்டம்

புதுக்கோட்டை மாவட்ட சுகாதாரப் பேரவைக் கூட்டம்  மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி  தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் (பொ) மா.செல்வி முன்னிலையில்   (03.03.2023) நடைபெற்றது.

பின்னர்  சட்ட அமைச்சர் ரகுபதி  கூறியதாவது: தமிழக மக்களின் நலன் காக்கின்ற வகையில், அவர்களின் உடல் நலத்தினை பேணி காத்திடும் பொருட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் , மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்து றையின் மூலம் பல்வேறு மருத்துவம் சார்ந்த நலத்திட்டங் களை பொதுமக்களுக்கு வழங்கி, அவர்களின் நலன் காத்து வருகிறார்கள்.தமிழ்நாட்டின் சுகாதார கட்டமைப்பு என்பது தேசிய அளவில் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது.
ஒரு கிராமத்தில் அல்லது நகரத்தில் சுகாதார தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றக்கூடிய திட்டங்கள் குறித்து, சம்பந்தப்பட்ட பகுதிகளிலுள்ள மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மருத்துவத்துறையைச் சார்ந்த அலுவலர்கள் ஆகியோர்கள் எடுத்துரைத்து, பணிகள் மேற்கொள்ளும் பொருட்டு, மாவட்ட சுகாதாரப் பேரவை நிகழ்ச்சி, வருடந்தோறும் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் 2-ஆவது மாவட்ட சுகாதாரப் பேரவை கூட்டம் இன்றைய தினம் சிறப்பாக நடைபெறுகிறது.  தமிழ்நாடு முதலமைச்சர்  மருத்துவத்துறையின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு வகையான வளர்ச்சித் திட்டப் பணிகளை செயல்படுத்தி வருகிறார்கள்.
மேலும் பொதுமக்களுக்கு மேம்படுத்தப்பட்ட சிகிச்சை முறைகள் கிடைப்பது உறுதிசெய்யும் வகையிலும், மருத்துவத்துறைக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்யும் வகையிலும், மருத்துவர்கள், மருத்துவத்துறை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மூலம் தேவைகளை கேட்டறிந்து அவற்றை நிறைவேற்றிட நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில், மாவட்ட சுகாதாரப் பேரவைக் கூட்டம் இன்றையதினம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மருத்துவர்கள் தெரிவித்த தேவைகள் அனைத்தும் நிறைவேற்றிடும் வகையில், பொதுமக்களின் உடல் நலனில் அக்கறை கொண்ட  தமிழ்நாடு முதலமைச்சர்  கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மருத்துவத்துறைக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகள், உயிர்காக்கும் உபகரணங்கள், அடிப்படைத் தேவைகள் உள்ளிட்டவைகள் நிறைவேற்றிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் ‘நமக்கு நாமே” திட்டத்தின் மூலம் பொதுமக்களின் பங்களிப்புடன் தேவையான பகுதிகளில் மருத்துவத்துறை கட்டமைப்பு வசதிகள் வலுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இதன்மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் மருத்துவப் பணிகள் அனைத்து தொய்வில்லாத வகையில் செயல்பட்டு பொதுமக்களுக்குத் தேவையான உயர் தரத்திலான சிகிச்சைகள் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் அரசின் மூலம் செயல்படுத்தப் படும் இத்தகைய நலத் திட்டங்களை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனசட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, இணை இயக்குநர் (ஊரக நலப் பணிகள்) மரு.ராமு, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.பூவதி, துணை இயக்குநர்கள் (சுகாதாரப்பணிகள்) மரு.ச.இராம்கணேஷ், மரு.கலைவாணி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top