Close
செப்டம்பர் 19, 2024 11:22 மணி

விஷ விதையை விழுங்கி உயிருக்குப் போராடிய குழந்தையைக் காப்பாற்றிய முத்துமீனாட்சி மருத்துவமனை மருத்துவர்கள்

புதுக்கோட்டை

விஷவிதை சாப்பிட்ட ஒரு வயதுக்குழந்தையை காப்பாற்றிய புதுக்கோட்டை முத்துமீனாட்சி மருத்துவமனை மருத்துவர்கள்

தவறுதலாக விஷச்செடியான ஊமத்தை விதையை விழுங்கி உயிருக்குப் போராடிய  ஒரு வயதுக் குழந்தையை  புதுக்கோட்டை முத்துமீனாட்சி மருத்துவமனை  மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், செம்பட்டி விடுதி, தோப்புக் கொல்லை கிராமத்தை சேர்ந்த ரெத்தினம் சாவித்திரி தம்பதியினரின் ஒரு வயது குழந்தை விஷ்ணு விளையாடும் போது தவறுதலாக ஊமத்தை விதைகளை சாப்பிட்டதால் குழந்தையின் உடல் நிலை மிகவும் மோசமானது. உயிருக்குஆபத்தான நிலையில் புதுக்கோட்டை முத்துமீனாட்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
குழந்தையை பரிசோதித்த அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர் சிவப்ரகாஷ் தலைமையிலான குழு மற்றும் குழந்தைகள் நல மருத்துவர்கோகுல ரமணன் குழந்தை விஷ்ணு விஷ விதைகளை சாப்பிட்டு அதிக நேரம் ஆனதால் குழந்தைகளுக்கு  வெண்டிலேட்டர் கருவி மூலம் குழந்தைக்கு தொடர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
48 மணிநேரத்துக்கு பிறகு வெண்டிலெட்டரில் இருந்து எடுத்து  அதி நவீன HFNC இயந்திரம் மூலம் தொடர் சிகிச்சை அளித்து குழந்தை விஷ்ணுவை மருத்துவர்கள்  காப்பாற்றினர்.
சிகிச்சை அளித்த குழந்தைகள் நல மருத்துவர் கோகுல ரமணன் கூறியதாவது: குழந்தைகளை பெற்றோரின் கண்காணிப்பில் மட்டுமே விளையாட அனுமதிக்க வேண்டும். குழந்தைகள் கைக்கு கிடைக்காதவாறு உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய பொருட்களை அப்புறபடுத்த வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.
ஆபத்தான நிலையில் வந்த குழந்தையை விரைவாக மருத்துவம் அளித்த அவசர சிகிச்சை பிரிவு மற்றும் குழந்தைகள் மருத்துவப் பிரிவு மருத்துவர்களையும் மற்றும் சக ஊழியர்களையும் டாக்டர் பெரியசாமி  வாழ்த்தி பாராட்டினார்.
மருத்துவமனையில் இந்த HFNC கருவி இருந்ததால் குழந்தை விரைவாக காப்பாற்ற  முடிந்ததாக  மருத்துவ மனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர்  பெரியசாமி தெரிவித்தார்.
 முத்து மீனாட்சிமனையின் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு குழந்தையின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள்  நன்றி தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top