Close
செப்டம்பர் 19, 2024 11:10 மணி

பெருந்துறை ஒன்றியத்தில் 15 லட்சம் மதிப்பிலான பணிகளை எம்எல்ஏ ஜெயக்குமார் தொடக்கம்

பெருந்துறை

பெருந்துறை ஒன்றியத்தில் 15 லட்சம் மதிப்பிலான பணிகளை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் தொடக்கி வைத்தார்.

பெருந்துறை ஒன்றியத்தில் 15 லட்சம் மதிப்பிலான பணிகளை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் தொடக்கி வைத்தார்.

பெருந்துறை ஊராட்சி ஒன்றியம், சுள்ளிப்பாளையம் ஊராட்சியில், ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து கான்கிரீட் சாலை அமைக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.

அதே போல், முள்ளம்பட்டி ஊராட்சி அலமேடு பகுதியில் ரூ. 7 லட்சம் மதிப்பில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து பொது கழிப்பிடம் அமைக்கும் பணியும் தொடங்கப்பட்டது .

இதனை பெருந்துறை சட்டமன்ற உறுப்பினரும், மாநில அம்மா பேரவை இணைச் செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழு உறுப்பினருமான ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்கு பெருந்துறை யூனியன் சேர்மன் சாந்தி ஜெயராஜ் தலைமை வகித்தார். பெருந்துறை யூனியன் துணை சேர்மன் உமா மகேஸ்வரன், முள்ளம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சிவகாமி குழந்தைசாமி,  ஒன்றிய குழு உறுப்பினர் ரொட்டி பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பெருந்துறை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் அருள்ஜோதி கே செல்வராஜ், பெருந்துறை வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வைகை தம்பி என்கிற ரஞ்சித் ராஜ், மாவட்ட கழகப் பொருளாளர் கே பி எஸ் மணி, அவைத்தலைவர் மேட்டுப்பாளையம் பாலு,

மாவட்ட எம்ஜிஆர் மன்ற இளைஞர் அணி இணை செயலாளர் திருமூர்த்தி, மாவட்ட மாணவர் அணி இணை செயலாளர் சுள்ளிப்பாளையம் விசுவநாதன், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் கனக்கம்பாளையம் சதீஸ், ஒன்றிய மாணவரணி செயலாளர் பால் சதீஷ் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகளும் பொதுமக்களும்  கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top