Close
அக்டோபர் 5, 2024 7:10 மணி

உலக கண் பார்வை தினத்தை முன்னிட்டு ஈரோடு வாசன் ஐ கேர் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பேரணி

புதுக்கோட்டை

உலக கண் பார்வை தினத்தை முன்னிட்டு ஈரோடு வாசன் ஐ கேர் மருத்துவமனை சார்பில் ஈரோட்டில் நடந்த விழிப்புணர்வு பேரணி

உலக கண் பார்வை தினத்தை முன்னிட்டு ஈரோடு வாசன் ஐ கேர் மருத்துவமனை சார்பில் ஈரோட்டில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் கண்பார்வை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது . அந்த வகையில் ஈரோடு வாசன் ஐ கேர் மருத்துவமனையின் சார்பில் ஈரோட்டில் வியாழக்கிழமை விழிப்புணர்வு பேரணி நடந்தது.

ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் கொடியசைத்து விழிப்புணர்வு பேரணியை தொடக்கி வைத்தார் .

இந்த பேரணியில் செவிலியர்கள், சுகாதாரத் துறை அலுவலர்கள், வாசன் ஐ கேர் மருத்துவமனை நிர்வாகிகள், நர்சிங் கல்லூரி வாசவி கல்லூரி மாணவ மாணவிகள் உள்பட 500 க்கும் மேற்பட்டோர்  பங்கேற்றனர்.

பேரணியில் பங்கேற்றவர்கள் கண் பார்வையின் முக்கியத் துவம் குறித்தும், கண்பார்வை தானம் குறித்தும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

ஈரோடு ஈவிஎன் ரோட்டில் உள்ள வாசன் கண் மருத்துவமனை முன்பு தொடங்கிய  பேரணி ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனை வரை சென்று மீண்டும் வாசன் கண் மருத்துவமனையில் நிறைவடைந்தது. முன்னதாக வாசவி கல்லூரி உடற்கல்வி இயக்குனர் ரமேஷ்  வரவேற்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top