Close
செப்டம்பர் 19, 2024 11:09 மணி

புதுக்கோட்டை புதுக்குளம் நடைபாதை தூய்மைப் பணி

புதுக்கோட்டை

புதுக்கோட்டை புதுக்குளத்தில் நடைபாதை தூய்மைப்பணியை தொடக்கி வைத்த எம்எல்ஏ முத்துராஜா.

புதுக்குளம் நடைபாதையை தூய்மைப்படுத்தும் பணி தொடங்கியது.
அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் நாட்டு நலப் பணித் திட்டம், புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் இணைந்து புதுக்குளவளாகத்தில் நடைபாதை தூய்மைப் படுத்தும் பணி தொடங்கியது.

நிகழ்வுக்கு, அரசு தொழில்பயிற்சி நிலைய முதல்வர் எஸ்.ராமர் தலைமை வகித்தார். புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்க தலைவர் டாக்டர் ஜி.மாரிமுத்து கலந்து கொண்ட  அனைவரையும் கெளரவித்தார்.

நிலைய மேலாண் குழு உறுப்பினர் மாருதி. கண.மோகன் ராஜா,  நகராட்சி துணை தலைவர் எம். லியாகத் அலி மற்றும் நகர செயலாளர் க.நைனா முகமது, நகராட்சி ஆணையர் எஸ்.நாகராஜன், நகராட்சி அலுவலர்கள் டாக்டர் கார்த்திக், ஜெய்சங்கர், கவுன்சிலர்கள் சந்தோஷ், காந்திமதி பிரேம்ஆனந்த், காதர்கனி, குமரகுரு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினர்களாக புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை. முத்துராஜா,  நகராட்சி தலைவர் திலகவதி செந்தில் ஆகியோர் கலந்து கொண்டு  தொடங்கி வைத்தனர்.

புதுக்கோட்டை
புதுக்கோட்டை புதுக்குளத்தில் தூய்மைப்பணி முகாமில் பங்கேற்றோர்

 நிகழ்வில் மருத்துவமனை தகவல் தொடர்பு அலுவலர் கே.கதிரவன், வழக்கறிஞர் ஏ.சந்திரசேகரன், ஆர்.சிவகுமார், தயாளன், பயிற்சியாளர் கிருஷ்ணன் உதவி பயிற்சி அலுவலர்கள் நடராஜன், ரங்கராஜ், ரமேஷ் சத்யநாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கண் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக பயனாளி ஒருவருக்கு புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக ரூ.5000  வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை சங்க செயலாளர் வி,ஆர்எம்,தங்கராஜா, பொருளாளர் எஸ்.செந்தில்வேல்  ஆகியோர் செய்திந்தனர்

முன்னதாக நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பி.ஜோதிமணி  வரவேற்றார்.நிறைவாக இளநிலை பயிற்சி அலுவலர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top