Close
செப்டம்பர் 20, 2024 4:10 காலை

ஒரே நாளில் 2 விருதுகள் பெற்ற ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனை

ஈரோடு

விருது பெற்ற ஈரோடு அபிராமி கிட்னி கேர் டாக்டர் தங்கவேலு மருத்துவமனை நிர்வாகிகள்

ஈரோடு அபிராமி கிட்னி கேர் டாக்டர் தங்கவேலு மருத்துவ மனைக்கு ஒரே நாளில் 2 விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

ஈரோடு பெருந்துறை சாலையில்  அபிராமி கிட்னி கேர் டாக்டர் தங்கவேலு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு சிறுநீரக மருத்துவம், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, டயாலிசிஸ், நீரிழிவு நோய் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமீபத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறந்த மருத்துவ சிகிசசை அளிப்பதற்காக பல துறை மருத்துவ மனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஈரோடு அபிராமி கிட்னி கேர் டாக்டர் தங்கவேலு மருத்துவமனைக்கு, தமிழகத்தி சிறந்த கிட்னி கேர் மருத்துவமனைக்கான இந்தியாஸ் மோஸ்ட் டிரஸ்டட் பிரண்ட்-2022  விருது வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் கடந்த மாதம் ஏப்.30 -ம் தேதி நடந்தது.

ஈரோடு

நடிகர் அர்பாஸ் கான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் சரவணன் மற்றும் மருத்துவமனையின் சேர்மேன் டாக்டர் தங்கவேலு ஆகியோரிடம் சிறந்த மருத்துவமனைக்கான விருதினை வழங்கி கௌரவித்தார்.

தொடா்ந்து, அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் சரவணனுக்கு, டயனர்ஜிக் பிசினஸ் சொல்யூசன் சார்பில் சிறுநீரக மருத்துவ சேவையில் ‘சிறந்த தலைமை பண்பாளர்’ என்ற விருதினை வழங்கி, கவுரவித்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top