Close
செப்டம்பர் 19, 2024 11:20 மணி

கோபி அருகே வருமுன்காப்போம் மருத்துவ முகாம்

கோபிச்செட்டிபாளையம்

கோபி அருகே பச்சமலை ஊராட்சியில் நடைபெற்ற வரும் முன் காப்போம் மருத்துவ முகாம்

ஈரோடு: தமிழக முதல்வரின் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம், கோபி அருகே மொடச்சூர் ஊராட்சிக்கு உள்பட்ட பச்சைமலை வேலா மண்டபத்தில் நடந்தது.

முகாமை கோபி நகராட்சி தலைவர் நாகராஜ், திமுக ஒன்றிய செயலாளர் சிறுவலூர் முருகன், ஊராட்சி மன்ற தலைவர் சரவணகுமார் ஆகியோர்  துவக்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர்கள் செந்தில்குமார், ஓம்பிரகாஷ், சுகாதார மேற்பார்வையாளர் செல்வம் மற்றும் அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top