Close
செப்டம்பர் 20, 2024 1:42 காலை

காமராஜபுரம் மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கோரிக்கை

புதுக்கோட்டை

புதுக்கோட்டை காமராஜபுரத்தில் நடைபெற்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கிளை தொடக்க விழாவில் பங்கேற்ற நிர்வாகிகள்

புதுக்கோட்டை காமராஜபுரம் மக்களின் குடிநீர்ப் பிரச்னைக்கு போர்க்கால அடிப்படையில் தீர்வுகாண வேண்டுமென இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தி யுள்ளது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் காமராஜபுரம் கிளைத் துவக்கவிழா சனிக்கிழமை நடைபெற்றது. கிளைத் தலைவர் ஜெ.மாணிக்கம் தலைமையில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு மாவட்டச் செயலாளர் ஆ.குமாரவேல் சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்தார்.

மாநிலக்குழு உறுப்பினர் துரை.நாராயணன், மாவட்டத் தலைவர் ரா.மகாதீர், நகரச் செயலாளர் கு.ஜெகன், சிஐடியு நகரச் செயலாளர் சரவணன் ஆகியோர் வாழ்த்திப்  பேசினர். கிளை துணைச் செயலாளர் தீபன் நன்றி கூறினார்.

காரமராஜபுரம் மக்களின் நீண்ட நாளைய கோரிக்கையான குடிநீர்ப் பிரச்னைக்கு போர்க்கால அடிப்படையில் நகராட்சி நிர்வாகம் தீர்வுகாண வேண்டும். அப்பகுதியில் புறம்போக்கில் குடியிருந்துவரும் ஏழைகளுக்கு பட்டா கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் துவக்க விழாவில் வலியுறுத்தப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top