Close
செப்டம்பர் 20, 2024 3:35 காலை

ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சுதந்திர தின விழா கருத்தரங்கம்

புதுக்கோட்டை

ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சுதந்திர தின விழா கருத்தரங்கில் பேசிய எம்எல்ஏ சின்னத்துரை

புதுக்கோட்டை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் 75 ஆவது சுதந்திர தின  விழா கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமைய புதுக்கோட்டையில் நடைபெற்றது.
புதுக்கோட்டை காமராஜபுரத்தில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு சங்கத்தின் நகரத் தலைவர் ஜெ.மாணிக்கம் தலைமை வகித்தார். புதுக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா சங்கத்தின் மாவட்டத் தலைவர் ரா.மகாதீர்,  இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.ஜனார்த்தனன், நகர்மன்ற உறுப்பினர்கள் சுப.சரவணன், லதா ராமலிங்கம் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
‘இந்திய விடுதலை போராட்டத்தில் இளைஞர்களின் பங்கு’ என்ற தலைப்பில் கந்தர்வக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மா.சின்னதுரை, ‘என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்’ என்ற தலைப்பில்  த.மு.எ.க.ச மாநில துணை தலைவர், கவிஞர் நா.முத்துநிலவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
முன்னதாக  நகரச் செயலாளர் கு. ஜெகன் வரவேற்க, காமராஜபுரம் கிளை செயலாளர் தோழர் மு.ஜீவா நன்றி கூறினார். நிகழ்வில் கே.ஏ.சத்திய பாலன் குழுவினரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top