Close
செப்டம்பர் 20, 2024 1:44 காலை

புதுக்கோட்டையில் பாஜக அரசு தொடர்பு பிரிவு சார்பில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு விபத்து காப்பீடு

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் பாஜக அரசு தொடர்பு பிரிவு சார்பில் 72 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அஞ்சல் துறை மூலம் 10 லட்சம் விபத்து காப்பீடு அட்டை வழங்கப்பட்டது

புதுக்கோட்டையில் பாஜக அரசு தொடர்பு பிரிவு சார்பில் 72 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அஞ்சல் துறை மூலம் ரூ. 10 லட்சத்துக்கான விபத்து காப்பீடு அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

பிரதமர் நரேந்திர மோடியின் 72-ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம், அரசு தொடர்பு பிரிவு சார்பில் 12 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக புதன்கிழமை மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் சீனிவாசன் ஏற்பாட்டில் 72 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அஞ்சல் துறை மூலம் 10 லட்சம் விபத்து காப்பீடு செய்யப்பட்டு, காப்பீடு அட்டை வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பாஜக அரசு தொடர்பு பிரிவு மாவட்ட செயலாளர் செல்லத்துரை, விவசாய அணி மாவட்ட பொதுச்செயலாளர் மயில் சுதாகர் மற்றும் தரவு மேலாண்மை பிரிவு மாநிலச் செயலாளர் கார்த்திக் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top