Close
செப்டம்பர் 20, 2024 1:41 காலை

தேமுதிக கட்சியின் 18 ஆம் ஆண்டு துவக்க விழா: மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கட்சி கொடி ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

புதுக்கோட்டை

தேமுதிகவின் 18 ஆம் ஆண்டு தொடக்க விழாவை இனிப்பு வழங்கி கொண்டாடிய தேமுதிக நிர்வாகிகள்

தேமுதிக கட்சியின் 18 ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை வடக்கு மாவட்டத்தின் சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கட்சி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

தேமுதிக கட்சி தொடங்கப்பட்டு 17 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில்(14.9.2022) 18 -ஆம் ஆண்டு துவக்க விழாவையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியம், நகரம் , கிளை கழகம், பேரூராட்சிகளில் தேமுதிக கட்சி கொடிகள் ஏற்றப்பட்டு பொதுமக்கள் இனிப்புகள் வழங்கி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை வடக்கு மாவட்டத்தின் சார்பில் தேமுதிக கட்சியில் 18 -ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை அசோக் நகரில் நடைபெற்ற கழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமை வகித்து கட்சி கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கும் மற்றும் பேருந்தில் சென்ற பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் பரமஜோதி, மாவட்ட துணைச் செயலாளர் பாக்கியலட்சுமி, வட்ட செயலாளர்கள் மாரிமுத்து, வீரமணி, விஜயகுமார், கோட்டை பிரவீன், ஒன்றிய செயலாளர் திருநாவுக்கரசு, மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் கனகராஜ் மற்றும் தேமுதிக கட்சி நிர்வாகிகள் சந்திரா, முதுகுளம் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top