Close
செப்டம்பர் 19, 2024 11:26 மணி

புதுக்கோட்டையில் அறிஞர் அண்ணா பிறந்தநாள்: திமுக அதிமுக உள்பட பல்வேறு கட்சியினர் மரியாதை

புதுக்கோட்டை

அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த சட்ட அமைச்சர் எஸ். ரகுபதி, எம்எல்ஏ முத்துராஜா, செல்லப்பாண்டியன் உள்ளிட்டோர்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 114 -ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்ட திமுக சார்பில் சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி தலைமையில் புதுக்கோட்டை எம்எல்ஏ- டாக்டர் முத்துராஜா மாவட்ட பொறுப்பாளர் கே.கே. செல்லப்பாண்டியன், முன்னாள் எம்எல்ஏ. ரா.சு. கவிதைப் பித்தன்,  நகரச்செயலர் ஆ. செந்தில், கீரை. தமிழ்ராஜா, கே.எஸ். சந்திரன்,  நகர்மன்றத்தலைவர் திலவதிசெந்தில், துணைத்தலைவர் எம். லியாகத்அலி, முன்னாள் நகரச்செயலர் அரு.வீரமணி மற்றும் திமுக நகர் மன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் தொண்டர்கள் பங்கேற்றனர்.

புதுக்கோட்டை மாவட்ட அதிமுக சார்பில் நகரச்செயலர் க. பாஸ்கர்  தலைமையில் கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று  அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

புதுக்கோட்டை

பின்னர் கட்சி அலுவலகத்தில் கட்சி கொடி ஏற்றி  பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில், மாவட்ட பொருளாளர் வி.சி. ராமையா, முன்னாள் எம்எல்ஏ ராஜு, மாரிமுத்து,  சுசீந்திரன், ஜீவா செல்வராஜ், தியாகராஜன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், தொண்டர்கள் திரளானோர் பங்கேற்றனர்.

புதுக்கோட்ட மாவட்ட அதிமுக(ஓபிஎஸ்) அணி: 

புதுக்கோட்டை
ஓபிஎஸ் அணியினர்

மாவட்டச்செயலர் ராஜே.ராஜசேகரன் தலைமையில் நிர்வாகிகள் அண்ணா மற்றும் எம்ஜிஆர் உருவச்சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top