Close
செப்டம்பர் 19, 2024 7:13 மணி

வாடிப்பட்டியில் அதிமுக ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

ஓபிஎஸ் அதிமுக

வாடிப்பட்டியில் நடைபெற்ற அதிமுக(ஓபிஎஸ்( நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய புறநகர் மாவட்ட செயலர் முருகேசன்

அதிமுக ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்டச் செயலாளர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது.

மதுரை மாவட்டம்,        வாடிப்பட்டி     வடக்கு ஒன்றியம்   மற்றும்  வாடிப்பட்டி பேரூர் கழக அதிமுக ஓபிஎஸ் அணி சார்பாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஆண்டிபட்டி பங்களாவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு, மதுரை புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் முருகேசன் தலைமை வகித்து பேசினார். வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் கட்டக்குளம் வேலுச்சாமி முன்னிலை வகித்தார். வாடிப்பட்டி பேரூர் செயலாளர் சுப்பு செந்தில் வரவேற்றார்.

இதில் நிர்வாகிகள் கல்லணை ஊராட்சி மன்ற தலைவர் சேது சீனிவாசன், மதுரை மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் கருப்பணன் பிரபாகரன் , சோழவந்தான் பேரூர் செயலாளர் ராமசாமி, பேட்டை கல்லாணை.

மருதமுத்து, சீனி,  சந்திரன், வெள்ளைச்சாமி, ராஜ்குமார், பெரியசாமி, சுந்தர், பாலகண்ணன், கார்த்திக், பால்பாண்டி ,பாரத், பெருமாள், மகாலிங்கம் , அஜித், மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், வாடிப்பட்டி வடக்கு ஒன்றியம் மற்றும் வாடிப்பட்டி பேரூர் கழக நிர்வாகிகளுக்கான விருப்பமனு வாங்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top