Close
செப்டம்பர் 19, 2024 11:22 மணி

அண்ணாமலை அவதூறு பரப்புகிறார்… மதிமுக தலைமை நிலைய நிர்வாகி துரைவைகோ குற்றச்சாட்டு

ஈரோடு

ஈரோட்டில் நடைபெற்ற வைகோ குறித்து மாமனிதன் என்ற ஆவணப்படம் திரையிடல் நிகழ்வில் பேசிய துரைவைகோ

அண்ணாமலை படித்தவர் என்றாலும் , கடந்த ஒரு ஆண்டு களாக அவரது விமர்சனங்கள் தரம் தாழ்ந்து , அவதூறு பரப்புவதாக இருப்பதாக மதிமுக தலைமை கழக செயலாளர் துரைவைகோ குற்றச்சாட்டினார்.

வைகோ குறித்து மாமனிதன் என்ற ஆவணப்படம் திரையிடல் ஈரோட்டில் நடைபெற்றது. இந்நிகழ்வில், மதிமுக தலைமை கழக செயலாளர் துரைவைகோ பங்கேற்று  மேலும் கூறியதாவது: தேர்தலில் ரீதியாக மதிமுக வெற்றி பெறவில்லை என்றாலும் தமிழக வாழ்வதாரங்களுக்காக கடுமையாக பல போராட்டங்களை நடத்தி் வெற்றி கண்டுள்ளது.

தேர்தல் கண்ணோட்டத்தில் மட்டும் மதிமுக ஆரம்பிக்க வில்லை என்றார்.வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி தொடரும் . கட்சி தலைமை விரும்பினால் நான் போட்டியிடுவேன். பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு வழங்குவதை மதிமுக எதிர்க்கிறது.

பாஜக தலைவர் அண்ணாமலை படித்தவர் என்றாலும் , கடந்த ஒரு ஆண்டுகளாக அவரது விமர்சனங்கள் தரம் தாழ்ந்து , அவதூறு பரப்பும் வகையில்  இருப்பது கண்டிக்கத்தக்கது. கோவை குண்டுவெடிப்பில் வெளிநாட்டு சதி இருக்கலாம் என்பதால் NIA விசாரிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்றார் துரை வைகோ.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top