Close
செப்டம்பர் 19, 2024 7:15 மணி

மின் கட்டண உயர்வு மற்றும் சொத்து வரி உயர்வை ரத்து செய்யக்கோரி பாஜகவினர் கையெழுத்தியக்கம்

புதுக்கோட்டை

மின்கட்டணம், சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்புத்தெரிவித்து புதுக்கோட்டையில் பாஜகவினர் நடத்திய கையெழுத்தியக்கம்

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு மற்றும் சொத்து வரி உயர்வை ரத்து செய்யக்கோரி பாரதிய ஜனதா கட்சி புதுக்கோட்டை வர்த்தகப்பிரிவு சார்பில் வணிகர்களை சந்தித்து கையெழுத்து வாங்கும் இயக்கம்  நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் நடைபெற்ற இந்த கையெழுத்தியக் கத்தின்  ஒரு பகுதியாக புதுக்கோட்டை நகர் பகுதியில் பாரதிய ஜனதா கட்சி வர்த்தகப்பிரிவு சார்பில் மாநிலத் துணைத் தலைவர் வீரன் சுப்பையா தலைமையில் புதுக்கோட்டை மேற்கு மாவட்ட தலைவர் விஜயகுமார், கிழக்கு மாவட்ட தலைவர் செல்வம் அழகப்பன் உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சியினர் ஊர்வலமாக சென்று  வணிகர்களை சந்தித்து மின் கட்டண உயர்வு மற்றும் சொத்து வரி உயர்வை  ரத்து செய்ய வலியுறுத்தும் வகையில் வணிகர்களிடம்   கையெழுத்து வாங்கினர்.

இந்நிகழ்வில் மேற்கு மாவட்ட பார்வையாளர் பழ.செல்வம், வர்த்தகப்பிரிவு மாவட்ட தலைவர் ராஜ்குமார், நகரத் தலைவர் காடுவெட்டியார் குமார், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் சீனிவாசன், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் சந்துரு, விளையாட்டுத் திறன் மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் பாண்டியராஜன் உள்ளிட்ட பாஜகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top