Close
செப்டம்பர் 19, 2024 11:07 மணி

வருவாய்த்துறையினரை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் காத்திருப்புப் போராட்டம்

புதுக்கோட்டை

குளத்தூர் தாலுகா அலுவலகம் எதிரில் தர்னா போராட்டத்தில் ஈடுபட்ட சிபிஎம் கட்சியினர்

வருவாய்த்துறையினரை கண்டித்து சிபிஎம் கட்சி சார்பில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

எந்தவித முன்னறிவிப்பும், கால அவகாசமும் கொடுக்காமல் 24 மணி நேரத்திற்குள் சுற்றுச்சுவரை இடிக்க கெடுவிதித்த வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினரைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வெள்ளிக்கிழமை காத்திருக்கும் பேராட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகாவிற்கு உட்பட்டது மேலூர் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த வி.ரெங்கசாமி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக உள்ளார். இவர் ஏற்கனவே, நில அளவைத்துறையினர் மூலம் நில அளவை செய்து தனது வீட்டைச் சுற்றி சுற்றுச்சுவர் எழுப்பியுள்ளார்.

இந்நிலையில், மேற்படி சுவர் அரசுப் புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக அரசியல் காழ்ப்புணர்சியின் காரணமாக வருவாயத்துறையினருக்கு சிலர் புகார் தெரிவித்துள்ளனர். அதன் படி எந்தவித முன்னறிவிப்பும், கால அவகாசமும் கொடுக்காமல் 24 மணி நேரத்திற்குள் சுற்றுச்சுவரை அகற்ற வேண்டுமென வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையின் சார்பில் ரெங்கசாமி வீட்டில் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.

வருவாய்த்துறையினரின் இத்தகைய அராஜகப் போக்கைக் கண்டித்து குளத்தூர் வட்டாட்சியர் அலுவலம் முன்பாக நடைபெற்ற காத்திருக்கும் போராட்டத்திற்கு கட்சியின் ஒன்றியச் செயலாளர் எம்.ஆர்.சுப்பையா தலைமை வகித்தார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் டி.ரகுபதி, எம்.நாகராஜ், ஆர்.லெட்சுசமணன் ஆகியோர் முன்னலை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சண்முகம், ஒன்நியக்குழு உறுப்பினர்கள் ஆர்;.சி.ரெங்கசாமி, ஏ.தேவராஜன் உள்ளிட்டோர் பேசினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top