Close
செப்டம்பர் 19, 2024 7:12 மணி

ஜெயலலிதா நினைவு நாள்… அமமுக சார்பில் மலரஞ்சலி..

மதுரை

வாடிப்பட்டியில் ஜெயலலிதா நினைவு நாளையொட்டி உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தும் அமமுகவினர்

 முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா நினைவு நாளை ஒட்டி அவரது  உருவப்படத்திற்கு  வாடிப்பட்டி பேரூராட்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

மதுரை புறநகர் தெற்கு மாவட்டம் வாடிப்பட்டி பேரூர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா நினைவு நாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு பேரூர் எம்ஜிஆர் மன்ற செயலாளர் மருது பார்த்திபன் கார்த்திகேயன் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இதில் நிர்வாகிகள் முன்னாள் கவுன்சிலர் மகா சரவணன், சிவபாலன், அய்யனார் ,செமினிபட்டி ஊராட்சி செயலாளர் சுகுமார், கச்சை கட்டி ஊராட்சி செயலாளர் வெள்ளிமலை, பத்மநாபன், வெள்ளைச்சாமி, நாகம்மாள், நாக சேது உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top